வியாழன், 4 ஏப்ரல், 2013

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால் சர்வதேச மட்டத்தில் நடாத்திய கவிதைப் போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை தடாகம் குடும்பத்தினரின் நல் வாழ்த்துக்கள்


ஒற்றுமை வெள்ளியே....!
(இத்ரீஸ் யாக்கூப் )

ஒற்றுமை வெள்ளியே
எங்கள் வானிலே
என்று நீ முளைப்பாய்?
வேறுபாட்டுத் திரைகளை
எங்கள் விழிகளில்
என்றுதான் அகற்றுவாய்?
மக்கள் மாளிகையில்
சரித்திரமாக வீசி வந்த
சமாதானக் கொடியிங்கே
நரித்தனக் கத்திரிகளால்
நறுக்கப்பட்டு நச்சு நிறங்கள் பூசி
கட்சிகளின் பெயரால்
கம்பங்களில் கட்டி
காசாக்கப் படுகிறதே...!
சமுத்திரத்தில் சுவர்கள் எழுப்பி
சூறையாட நினைப்பதெல்லாம்
சுகபோகக்காரர்களின் சந்தர்ப்ப சூழ்ச்சியே
அதை அறியாது அன்பானவர்களை
அந்நியர்களாக்கிப் பார்ப்பது
மனிதநேயத்தின் வீழ்ச்சியே!
கண்கெட்டக் கூட்டத்தினருக்கு
பண்பாட்டு வைத்தியம் தேவை
புறமெங்கும் பரவி வரும்
பிரிவினைஇருள் விலக
புரிதலின் திரிகளை ஏற்றுவதே
இன்றைய நம் முக்கிய சேவை...!
ஆம் அன்பானவர்களே..!
வாருங்கள் ஒன்றுபடுவோம்!
சகமனிதரை நேசிப்போம்
அகத்தின் ஒளியில்
வாழும் யுகங்களை அர்த்தமாக்குவோம்

அமைப்பாளர் அனுமதியோடு
ரமலான் தீன்
தகவல் பிரிவு
தடகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி அமைப்பு

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின் மலேசியா அமைப்பாளர் -அறிமுகம்




குமாரி கே.எஸ்.செண்பகவள்ளி



மின்னஞ்சல் - ksvally@yahoo.com

கல்வி : Bachelor in Business Administration 
BBA (Hons), USA
தொழில்
சிறப்பதிகாரி, 
தகவல், தொடர்பு, பண்பாடு அமைச்சு 
(Special Officer at Ministry of Information, Communication & Culture)
பகுதி நேரத் தொழில் : எழுத்தாளர் , ஆய்வாளர்
இலக்கியப் படைப்புகள் : சிறுகதைகள், ஒரு பக்கக் கதைகள்
கவிதை (மரபு, புதுக்கவிதை, ஹைக் கூ) 
கட்டுரை (வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்)
விருது : வாசகர் நற்பணி விருது (VNV - 2005)
: சிறந்த சேவையாளர் (2007)
: ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது’ (2012) 
(இளையத் தலைமுறை சிறந்த கட்டுரையாளர்)
பரிசுகள் : சிறுகதை, கவிதை, கட்டுரை
{ நாளிதழ், வார, மாத இதழ்கள், தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம், கிள்ளான் வாசகர் இலக்கியச் சோலை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் நேசன், மன்னன் மாத இதழ், சூரியன் மாத இதழ், மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம், பொது இயக்கங்கள் போன்ற அமைப்புகள் வாயிலாக நடத்திய இலக்கியப் போட்டிகளில் பங்குக் கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளார் . }


அண்மையக் காலப் பதிவுகள்:-
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் “மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம் ஒரு வரலாற்றுக் களஞ்சியம்” என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்துள்ளார் 
மலேசியத் தொலைக்காட்சியில் “வசந்தம்” என்னும் நிகழ்ச்சியில் மலேசிய வானொலி மின்னல் பண்பலையில் ஒரு மணி நேர நேர்க்காணல்..
கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டன் தமிழ் வானொலியில் ஒரு மணி நேர நேர்க்காணல்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “ மலேசிய இலக்கியத்தில் பெண் படைப்பாளர்களின் வளர்ச்சி – ஒரு பார்வை” என்ற தலைப்பிலும் கட்டுரைச் சமர்ப்பித்துள்ளார் 
கடந்த 14-15 பிப்ரவரி 2013இல் சென்னையில் நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் தேசியக் கருத்தரங்கில் “அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் முனைவர் பா.த கிங்ஸ்டன் எனது கவிதைகளை ஆய்வுச் செய்து “புலம்பெயர் இலக்கியங்கள் பார்வையில் மலேசியக் கவிஞர் கே.எஸ்.செண்பகவள்ளி” என்ற தலைப்பினில் கட்டுரை சமர்ப்பித்துள்ளார்.
பொதுச்சேவை
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (துணைச் செயலாளர்) 
சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கம் (துணைச் செயலாளர் 
சுங்கை சிப்புட் வாசகர் இயக்கம் (தலைவி) 
மேனாள் புத்ரி ம.இ.கா பேராக் மாநிலம் (துணைத்தலைவி) {அரசியல் கட்சி} 
புத்ரி ம.இ.கா சுங்கை சிப்புட் தொகுதி {அரசியல் கட்சி} 
போன்ற அரசியல், சமூகம், இலக்கியம் ஆகிய அமைப்புகளில் பங்காற்றி வருகின்றார் 
எழுத்துறை பிரவேசம்


எழுத்துத் துறையில் 25 வருட அனுபவங்கள். 1986ஆம் ஆண்டு முதலாக எழுதி வருகிறேன். முதல் படைப்பு 13வது வயதில் (மரம்) தமிழ்நேசன் நாளிதழுக்கு எழுதிய கவிதையாகும். 1990ஆம் ஆண்டு முதல் சிறுகதை (தமிழ்நேசன் 70ம் ஆண்டு மலர்), 2004ஆம் ஆண்டு முதலாவது ஆய்வுக்கட்டுரை (அரசியல் பயணத்தில் டத்தோஸ்ரீ சாமிவேலு)
தற்சமயம் ஈடுபட்டிருக்கும் இலக்கியத் பணிகள்:
மக்கள் ஓசை, தமிழ்நேசன், மலேசிய நண்பன், அன்பு இதயம், தமிழ் ஓவியம் போன்ற நாளிதழ், வார மாத இதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரைகளைஎழுதி வருகின்றார் 
“மலேசியத் தமிழ் எழுத்துலகம்”, “தங்கமீன்”, “திண்ணை”, ஆகிய இணையத்தளங்களிலும் படைப்புகளை எழுதியுள்ளார் 
நாட்டின் தேசத்தலைவர்கள், முக்கியமான நாட்களைக் குறித்து இதுவரை 60 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார் 


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை 
அமைப்பாளர் 
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
 

தாமரை 10


கலாநெஞ்சன் ஷாஜஹான்



எம்.இஸட் . ஷாஜஹான்

புனைப்பெயர் – கலாநெஞ்சன் ஷாஜஹா

ஈமெயில் – mzshajahan@gmail.com

கல்வி கற்ற பாடசாலை – கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனி தேசியக் கல்லூரி, மருதானை ஸாஹிராக் கல்லூரி 

கல்வித் தகைமைB.Ed 


தொழிற் தகைமை :- ( 1) ஊடகவியல் துறையில் டிப்ளோமா

(கொழும்பு பல்கலைக்கழகம்)

2) மனித உரிமை தொடர்பான டிப்ளோமா

3 ) கனணி தொர்பான அனுபவமும் கல்வித் தகைமையும் (டிப்ளோமா) 

சமாதான நீதவான் - நீர்கொழும்பு நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட )

நிரந்தரத் தொழில் :- 1990 ஆசியர் தொழிலுக்கு வந்தமை-

2001 ஆம் ஆண்டு ஆசிரிய ஆலோசகராக நியமனம்

2009 ஆம் ஆண்டு அதிபர் சேவை (2-11) பரீட்சையில் சித்தியடைந்தமை 

தற்போது பிரதி அதிபர் (நீர்கொழும்பு - கட்டானைவித்தியாலோக்க வித்தியாலயம்)


விசேட தகைமைகள் 

(1) எழுதி வெளியிட்டுள்ள நூல்கள் :-

(அ) மீண்டும் ஒரு தாஜ்மஹால் - (கவிதைத் தொகுதி)

(ஆ ) ஏன் இந்த மௌனம் ? -கவிதைத் தொகுதி)

(இ) மெட்டுச்சரம்(இஸ்லாமியப் பாடல்கள்)

(ஈ) இதயகீதம்(இஸ்லாமியப் பாடல்கள்)(1) வீரகேசரி பத்திரிகையின் நீர்கொழும்பு பிரதேச நிருபராக கடந்த 8வருடகாலமாக பணியாற்றநி வருதல்

(2) www.negombotamilweb.blogspot.com என்ற இணையத்தளத்தை (நீர்கொழும்பு பிரதேச இணையத் தளம் ) கடந்த மூன்று வருட காலமாக நடத்தி வருதல்.


(3) காலாநெஞ்சன் ஷாஜஹான் என்ற பெயரில்1979 ஆம் ஆண்டு முதல் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனங்கள், பாடலாக்கம் எழுதி வருதல் அத்துடன்www.kalanenjanviews.blogspot.com என்ற இணைய முகவரி கொண்ட எனது புளொக் ஒன்றை பேணுதல்.


(4) 1992-1995 வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக (பகுதி நேரமாக) கடமையாற்றியிருத்தல். அத்துடன் சுயாதீன தொலைக் காட்சி சேவையில் முன்னர் ஒளிபரப்பான முத்துச்சரம் மற்றும் ரசிகர் அரங்கம் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி அமைப்பாளராக பணியாற்றியிருத்தல்.

5)அகில இலங்கை ரீதியில் இலக்கியப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளில் பல விருதுளையும் பரிசில்களையும் பெற்றிருத்தல்.

பாடலாக்கம்-கவிதை-சிறுகதை-கட்டுரை- ஆய்வுக் கட்டுரை – பேச்சு, 


(6) 1991 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு ( SAF Games-91)இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வர்ணனையாளராகக் கடமையாற்றியிருத்தல். 

(7) மஹ்திதாசன் என்ற பட்டம் வழங்கப்பட்டிருத்தல்


.கலைமகள் ஹிதாயா ரிஸ்வி


தாமரை - 09

நான் தேடிப் பெற்ற புதையல் - தேனம்மை லெக்ஷ்மணன்



இவர்  படித்தது  இளங்கலை வேதியல் ( பாத்திமா கல்லூரி மதுரை) , ( முதுநிலை அரசியல் அறிவியல்)
தற்போது புத்தக ஆசிரியர், சுதந்திர எழுத்தாளர், பத்திரிகையாளர்( ஜர்னலிஸ்ட்), கவிஞர், வலைப்பதிவர், சிறப்புப் பேச்சாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். இப்படி இவர் திறமையை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.


வினா :- உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்? உங்களைப் பற்றிக் கூறுங்கள்?
-
விடை:-  நான் இல்லத்தரசி. வேதியலும் அரசியல் அறிவியலும் படித்திருக்கிறேன். எனக்கு இரு ஆண் பிள்ளைகள் கணினிப் பொறியாளர்கள். என் கணவர் வங்கிப் பணியில் இருக்கிறார்.

வினா:-  எழுத்து தொடக்கம் எப்படி தொடங்கியது?

விடை :- சின்னப் பிள்ளையில் அப்பாவின் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துக் கவிதை எழுதினேன். அதை அப்பாவும் அம்மாவும் ஃப்ரேம் செய்து இன்னும் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்கள். பின் கல்லூரிப் பருவத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.

வினா :- தமிழ் கவிதை தமிழ் மொழி இவைகளுடனான உங்கள் நெருக்கம் பற்றி சொல்லுங்கள்?

விடை :-  என் கல்லூரிப் பருவத்தில் ஃபாத்திமா அம்மா, பாலாம்பா மிஸ் ஆகியோர் தமிழ்ப் பாடம் எடுத்திருந்தாலும் எனக்கு நெருக்கமானவர் என்றால் அது என் தமிழன்னை எம் .ஏ. சுசீலாம்மாதான். அவர் அப்போது தற்காலத்தில் பெண்களின் நிலைமை பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதனால் அவர் ஆய்வுப் பணிக்காக வாங்கிய நூல்களை எங்களிடம் தினம் ஒன்றாகக் கொடுத்துப் படிக்கச் சொல்வார். அதிலிருந்து நாங்கள் கருத்துக்களை மறுநாள் எங்கள் டைரியில் எழுதிக் கொடுக்க வாசித்து திருத்தங்கள் விளக்கங்கள் சொல்வார். ஊக்கம் கொடுப்பார். இதனால் தினம் ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. விவேகானந்தர் பற்றிய ஒரு கவியரங்கத்தில் நாங்கள் கவி பாடிய போது “ இவர்கள் எல்லாம் பேனாவின் கழுத்து வலிக்கும் வரை எழுதுபவர்கள் “ என்று கூறி ஒரு பேனாவைப் பரிசளித்தார்.

வினா :- மரபுக் கவிதைகள் , புதுக்கவிதைகள் எது உங்களுக்குப்


பிடித்தமானதாக இருக்கிறது?


விடை :- மரபுக் கவிதைகள் சீர் அசையுடன் தளை தட்டாமல் எதுகை மோனையுடன் சந்தத்துடன் இருக்க வேண்டும். புதுக்கவிதைக்கு சந்தமும் சில எதுகை மோனையும் போதும். எல்லாருமே நினைத்ததைக் கவிதையாக , துளிப்பாவாகப் பாட முடியும். தமிழில் ஓரளவு தேர்ச்சியும் சொல்ல வந்ததைத் தெளிவாக மொழியறிவோடும், பொருட் குற்றமில்லாமலும் சொன்னால் போதும். எனவே நான் கல்லூரியில் படித்த போது கவிதை எழுதுகிறேன் என்றால் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். இப்போது அநேகமாக அனைவருமே எழுதுவதால் அது வியப்புக்குரிய ஒன்றாக இல்லை.

வினா :- மூத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது நேரடியாக வழிகாட்டுகிறார்களா?


விடை :-  என் ஆசிரியைதான் என் வழிகாட்டி. அவர் மூலம் நான் மகாகவி பாரதி, சி. சு. செல்லப்பா, வை. மு. கோதை நாயகி அம்மாள், கி. ரா., லா. ச. ரா, தி. ஜா.ரா, கல்கி, அசோக மித்திரன், புதுமைப் பித்தன், சுஜாதா , ஸ்டெல்லா புரூஸ், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, பாலகுமாரன், மாலன், சுப்ரமண்ய ராஜு,சிவசங்கரி, இந்துமதி ஆகியோரைப் படித்திருக்கிறேன்.
என் அம்மா வாங்கித் தந்த ரஷ்யப் புத்தகங்களில் மீகயில் கோர்பசேவ் கதைகள் பிடிக்கும். தஸ்தாவ்யெஸ்கி, விக்டர் ஹியூகோ , மார்க்கஸ் அரேலியஸ் , வெர்ஜீனியா உல்ஃப், தாகூர் , சரத் சந்திரர் படித்திருக்கிறேன். வெகுஜனப் பத்திரிகைகளில் மணியன், சாவி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் படித்திருக்கிறேன். முத்துலிங்கம், பாரதி மணி, ஷாஜியின் எழுத்துக்கள் பிடிக்கும். 


ஆனால் எனக்குப் பிடித்தவர்கள் வைக்கம் முக்கம்மது பஷீர், தோப்பில் முகம்மது மீரான், கமலாதாஸ். இவர்கள் நூல்கள் என்னைப் புதுப்பிக்கின்றன. திரும்ப திரும்பப் படித்தாலும் அலுக்காத நூல்கள் இவை. நேரடியாக இவர்கள் வழிகாட்டவில்லை என்றாலும் இவர்களைப் போல எல்லாம் சிறந்ததான ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற ஆவல் மீதூறுகிறது இவர்களைப் படிக்கும்போதெல்லாம்.
(தோப்பில் முகம்மது மீரான், மிக மிக நெருக்கான சகோதரர் எனக்கு 
அண்மையில் இலங்கை வந்து போனார் )அவர் கதைகள் எனக்கும் பிடிக்கும்

வினா :- எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா?

விடை :- நிறையப் படிக்க வேண்டும். அப்போதுதான் நம் எழுத்து செம்மைப் படும். நிறைய பயணங்கள் மற்றும் நம்மைச் சுற்றி நடப்பவற்றை நன்கு கவனித்து வந்தாலே எழுத்துக்கு உதவும்.

வினா :- சமகால கவிதைகளை எப்படி வாசித்து வருகிறீர்கள் எப்படி இருக்கின்றன?

விடை :-  கவிஞர்களில் கண்ணதாசன், அப்துல் ரஹ்மான், வைரமுத்து, தபூ சங்கர், மனுஷ்யபுத்திரன், நா. முத்துக்குமார், பா. விஜய், தாமரை. ஆகியோரைப் பிடிக்கும். சிறப்பாக இருக்கின்றன. 

வினா :-  கவிதைக்கான இணைய தளங்கள் உங்கள் எழுத்திற்கு எந்தளவில் உதவுகின்றன?

விடை :- முக நூலிலும் வலைத்தளத்திலும் அநேகர் எழுதினாலும் என்னைக் கவர்ந்த கவிஞர்கள் நேசமித்திரன், விஜய், பாரா, கமலக் கண்ணன், நவாசுத்தீன், ராகவன், ரிஷபன், தமிழரசி, பத்மா, சக்தி செல்வி, விஜயலெக்ஷ்மி, மயோ மனோ, ஈழவாணி, ஹேமா, .இவர்கள் கவிதைகள் நம் எண்ணங்களோடு இயைந்து இருக்கின்றன.

வினா :-  உங்களுக்கு கவிதையின் மீதான ஆர்வம் ஏற்பட்டது எப்படி? அது எப்போது ?

விடை :-  நீ நன்றாக கவிதை எழுதுகிறாய் என்று என் ஆசிரியை சுசீலாம்மா சொன்ன போது ஏற்பட்டது. புதுக்கவிதை பற்றிய ஒரு கட்டுரையை கவிதை வடிவில் சமர்ப்பித்த போது ஐந்துக்கு நாலே முக்கால் மதிப்பெண்களை ஃபாத்திமா மிஸ் வழங்கியபோது ஏற்பட்டது. கல்லூரிக் காலத்தோடு நின்றுவிட்டது. பின் என் ஆசிரியையைத் திரும்ப சந்தித்தபோது புத்துயிர் பெற்றது.

வினா :-   புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி கூறமுடியுமா ? கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?


விடை :- புதுக்கவிதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். நவீன கவிதைக்கு பின் நவீனத்துவம், செவ்வியல், லேட்டரல் திங்கிங், இதெல்லாம் பகுத்துப் பிரித்துச் சொல்லத் தெரியும் அளவுக்குக் கவிதை சொல்லத் தெரியணும்.


வினா :-  கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன ?

விடை :- கவிதை என்பது எண்ணப் பகிர்வு . கருத்துப் பகிர்வு. 


வினா :- கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா?  நாவல், சிறுகதை என்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா ?


விடை :- நாவல் பற்றி யோசிக்கவில்லை. 4 வரியிலோ, 10 வரியிலோ கவிதை சொல்லும் இன்பம் ஒரு முழு நீள நாவலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட விடவில்லை. நினைத்தை உடனே சொல்லிவிட வேண்டும். சிறுகதைகள் சில எழுதி இருக்கிறேன். தினமணி நடத்திய போட்டியில் ஊக்கப் பரிசு வாங்கி இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது சில சிறுகதைகள் எழுதி இருக்கிறேன். சிறுகதை இலக்கியத்தில் ஆர்வம் இருந்தாலும் எண்ணக் கோர்வையை எழுத்தாக்கப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது சிந்தனை வேறு திசைகளில் ( முகநூல் ) செல்வதால் சிதறி விடுகிறது. 


வினா :- உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?

விடை :-  திருமணம் ஆனதும் எழுத்துப் பணியில் ஈடுபட முடியாமல் அடுத்து
அடுத்துக் குழந்தைகள் . அவர்கள் வளர்ப்பு, பின் இப்போது முகநூல்
கவனச் சிதறல்.

 வினா :-  இறுதியாய் என்ன சொல்ல போகிறீர்கள்?
விடை :- முன்பு கவிதை, பின்பு சிறுகதை , இப்போதெல்லாம் இன்வெஸ்டிகேடிங் ஜெர்னலிசம் தான் அதிகம் படிக்கப்படுகிறது. மொழியின் ஆட்சியில் ஒவ்வொன்றும் புதுவடிவம் எடுத்து வருகிறது. எது மக்களைக் கவருகிறதோ அதுவே வெல்லும். எனவே பழயன கழிந்து புதியனவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். நிறையப் படிக்கவும் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.
வினா :- படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலகுவாக கையாள முடிகிறது?


விடை :- என்னுடைய கவிதைகள் பெரும்பாலும் படிமக் கவிதைகளே. ஒன்றை இன்னொன்றாய் இனம் காணும் போது அல்லது ஒன்றில் இன்னொன்றை இனம் காணும் போது இந்தப் படிமங்களை லாவகமாக அதில் பொருத்தும் உத்தி கைவருகிறது. மூன்று வரி என்றாலும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.


வினா :- எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது?

விடை :-  படைப்பாளிகள் அதிகரித்து விட்டார்கள்  மற்றும் படைப்புக்களும் அதிகரித்து விட்டன. முன்பு புத்தகம் போடுபவர்கள் குறைவு. வாசிப்பவர்கள் அதிகம். இப்போது புத்தகம் வெளியிடுபவர்களும் வாசிப்பவர்களும் அதே வட்டத்தில் தான் வருகிறார்கள். எனவே சிறப்பான ஒன்றே வெல்லும். “ ஈழ எழுத்துக்களில் எனக்கு கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , ரிஷான் ஷெரீஃப், அஸ்மி , ஈழவாணி, மாயோ மனோ, குழந்தை நிலா ஹேமா ஆகியோரை மிகவும் பிடிக்கும். மிகுந்த படைப்பாற்றல், ஈழத்தை , அதன் வலியை வலிமையோடு பகிரும் தன்மை, மனித நேயம் கொண்ட எழுத்துக்கள் ஆகியவற்றுக்காகப் பிடிக்கும். ஒரு காலகட்டத்தின் மக்களின் வாழ்வியலை அவர்களின் பிரச்சனைகளைப் பேசும் அவர்களின் எழுத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இன்னும் அவர்களின் எழுத்து பலரையும் சென்று அடைய வேண்டுமென எண்ணுகிறேன். “


இவரைப் பற்றிய என் மன டயரியின் பதிப்பு

இரண்டு புத்தகங்களின் ஆசிரியர்.

1. ” சாதனை அரசிகள் ” - போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்

2. ” ங்கா “ - குழந்தைக் கவிதைகள்.

சிறுகதை எழுத்தாளர்.

தினமணி & காரைக்குடி புத்தகத் திருவிழா ( 2012) இணைந்து நடத்திய
சிறுகதைப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்றவர்

வானொலி:-
எப்போதும் உங்களுடன் 106.4 ஹலோ எஃப். எம்மில் திரைப்பட விழா
சமயத்தில் சர்வதேச சினிமா பற்றி கருத்து கூறி உள்ளார்

என்னைக் கவர்ந்த சாதனைப் பெண் யார் என்று அஞ்சரைப்
பெட்டி எம்மில் சிறந்த (பெண் வலைப்பதிவாளர் )
நிகழ்ச்சிக்காக திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடி ஹலோ எஃ
எம்மின் ஆர் ஜே ஜெயகல்யாணி பேட்டி எடுத்துள்ளார்.


வலைப்பதிவர். :-
“சிறந்த பெண் வலைப்பதிவருக்கான சமூக இணையப் பங்களிப்புக்காக
” ”ஈரோடு சங்கமத்தில்” விருது பெற்றார் . 15 ஆண் பதிவர்களுடன்
சிறப்பானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் பதிவர் இவர்
. 2009 ஜூலையில் இருந்து தொடர்ந்து வலைப்பதிவு எழுதி வருகின்றார்

சும்மா என்று ஒரு வலைப்பதிவு ஆரம்பித்த இவர் தொடர்ந்து 4
வலைப்பதிவுகள் ஆரம்பித்து தற்போது எழுதி வருகின்றார்
வலைப்பூ எழுத்துக்காக கிட்டத்தட்ட 25 விருதுகளுக்கு மேல் வாங்கி
இருக்கின்றார்

இவருடைய சும்மா என்ற வலைப்பதிவு சுமார் 1, 89, 000
பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

அவள் விகடனில் “ வலைப்பூவரசி” என்ற பெயரோடு இவர் வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டது.

இவரது வலைப்பூக்கள்

1. http://honeylaksh.blogspot.com/ - தமிழில் “ சும்மா” . கதை, கவிதை, கட்டுரை, சினிமா, புத்தக விமர்சனம், நிகழ்வுப் பகிர்வுகள், புத்தக வெளியீடு, பத்ரிக்கைகளில், இணையங்களில் வெளியான த ன்னுடைய படைப்புக்களைப் பகிர்ந்து வருகின்றார்

2. http://thenoos.blogspot.com/.- . இது இவருடைய சமையல் குறிப்புக்கள் அடங்கியது. ஆங்கிலம் மற்றும் தமிழில் சமையல் குறிப்புக்களை எழுதி வருகின்றார்

3. http://thenusdiary.blogspot.com/ - இதில் இவருடைய இளமைக்கால, குழந்தைப் பருவ, மற்றும் தற்போதைய கவிதைகள், குறுங்கவிதைகள், பொதுவாக எழுதி வருகின்றார் கல்லூரிக் காலத்தில் எழுதிய பழைய கவிதைகளையும் இதில் உள்ளது .

4, http://muthukkolangal.blogspot.com/ . இதில் அவர் போட்ட கோலங்கள் மற்றும் பத்ரிக்கைகளில் வெளிவந்த த ன்னுடைய கோலங்களைப் பகிர்கின்றார்
.
5. சுதந்திர எழுத்தாளர்.:-

. லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், சூரியக்கதிர், நம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஷல் ஆகியவற்றில் கட்டுரைகள், பேட்டிகள், நேர்காணல்கள் , கோலங்கள் அவ்வப்போது எழுதி வருகிகின்றார்

.குங்குமம்:- வலைப்பூக்கள் பற்றி இணையதள எழுத்தாளர் என்ற தலைப்பில் குங்குமத்தில் எழுதி உள்ளார்
குங்குமத்தில் மேலும் 4 சிறுகதைகளும், 3 கவிதைகளும் வெளிவந்துள்ளன.
வலைப்பேச்சு பகுதியில் இவருடைய ய முகநூல் ஸ்டேடஸ் வெளியாகி உள்ளது.
“அரட்டைக் களமா, ஆபாசத் தளமா” என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரபல பதிவர்களின் கருத்து என்ற தலைப்பில் இவரு டைய கருத்தும் இடம் பெற்றுள்ளது.

. குங்குமம் தோழி:- இரண்டு பக்கங்கள் குழந்தைக் கவிதைகள் வெளிவந்துள்ளன.
குங்குமம் தோழி இணைப்புகளில் சமையலறை டிப்ஸ்கள் வெளியாகியுள்ளன
. குங்குமம் தோழியின் முகநூல் பக்கத்தில் இவருடைய கவிதைகளும், சமையல் குறிப்புக்களும், “நானென்பது யாதெனில்” என்ற தலைப்பில் கட்டுரைகளும் வெளியாகி உள்ளன.
குமுதம்
:- 4 கவிதைகள் வெளியாகி உள்ளன.
இதில் முதலில் வந்த கவிதை குமுதத்தில் இரண்டு பக்கங்களில் வெளிவந்தது
. 11 ஹைக்கூக்கள் அடங்கிய “ அம்மா யானை” என்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகள்
. குமுதம் பக்தி ஸ்பெஷல்:- இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன
. திருவாசகம் பற்றியும், குன்றக்குடியின் குடைவரைக் கோயில்கள் பற்றியும் . ”பூஜையறைக் கோலங்கள் ” என்ற தலைப்பில் 50 கோலங்கள் வரை வெளிவந்துள்ளது.

குமுதம் ஹெல்த் ப்ளஸ்ஸில் “மேக்கப்புக்கு பேக்கப்” என்ற தலைப்பில் இவருடைய கருத்து வெளியாகியுள்ளது.

ஆனந்தவிகடன் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன.

. கல்கியில் 4 கவிதைகள் வெளியாகியுள்ளன.
இந்தியா டுடே ரஜனி சிறப்பிதழில் ரஜனி பற்றி இவர் கூறிய கருத்து வெளியாகி உள்ளது.

அவள் விகடனில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது. இவருடைய வலைப்பூவை அறிமுகப்படுத்தி வலைப்பூவரசி என்ற பட்டம் கொடுத்துள்ளார்கள்.
தேவதையில் இரு கவிதைகள் வெளியாகியுள்ளன.
ப்ளாகர் அறிமுகம் பக்கத்தில் வலைப்பூக்களும் படைப்புக்களும் பகிரப்பட்டுள்ளன
.
. மல்லிகை மகளில் இரு கவிதைகள் வெளியாகி உள்ளன.
ஒரு பக்கம் முழுக்க 9 குட்டிக் குழந்தைக் கவிதைகளும் வெளியாகி உள்ளன.

ஆஸ்த்ரேலியாவிலிருந்து வெளிவரும் “மெல்லினம்” இதழில் “பெண் மொழி” என்ற தலைப்பில் 16 கட்டுரைகளும், ஒரு கவிதையும் எழுதி உள்ளார்

. “இன் அண்ட் அவுட் சென்னை” – ஃபோர்ட்நைட்லி இதழில் இவருடைய 10 கட்டுரைகளும், 8 பிரபலங்களின் அறிமுகங்களும் இடம் பெற்றுள்ளது.

. ”சென்னை அவென்யூ” – ஃபோர்ட்நைட்லி இதழில் 2 கட்டுரைகளும், 2 சமையல் குறிப்புக்களும் ஒரு பேட்டிக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

. யுகமாயினியில் ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது.

பூவரசி காலாண்டிதழில் ஒரு கவிதையும் ஒரு கட்டுரையும், ஒரு புத்தக விமர்சனமும் இடம் பெற்றுள்ளது.
. சமுதாய நண்பனில் 9 கவிதைகள் வெளியாகியுள்ளன.

நம் தோழியில் ஒரு கவிதையும், ஒரு கட்டுரையும், ஒரு குறும்பட விமர்சனமும் இடம் பெற்றுள்ளன.

லேடீஸ் ஸ்பெஷலில் 20 போராடி ஜெயித்த பெண்கள் பற்றிக் கட்டுரை எழுதியுள்ளார் . 7 மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 20 பெண் வலைப்பதிவர்களையும், 7 ஆண்வலைப்பதிவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்
இவருடைய ஒரு சினிமா விமர்சனமும், அம்மா பற்றியும், சொர்ணலிங்கேஸ்வரர் பற்றியும், தீபலெக்ஷ்மி பற்றியும் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. 3 கவிதைகளும் வெளிவந்துள்ளன.

சூர்யக் கதிரில் வடிவுக்கரசி, ஊர்வசி, பாத்திமா பாபு, பாரதிமணி, பாடலாசிரியர் விவேகா, மாணிக்க விநாயகம், ரெனினா ரெட்டி, லெக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஹூசைனி, வினோ சுப்ரஜா ஆகியோரை பேட்டி எடுத்துள்ளார் 3 கவிதைகள் வெளியாகியுள்ளன.
.
. இவள் புதியவளில் ”வலைப்பூக்களில் கலக்கி வரும் புயல் பூக்கள்” என்ற தலைப்பில் பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.
பெண்கள் சுய உதவிக் குழுக்கள், மருத்துவர்கள் பேட்டி, பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், பள்ளிப் பிள்ளைகள், வி ஆர் எஸ், பண்டிகைப் பலகாரங்கள், பொங்கல் பற்றிக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

திருச்சி பதிப்பு தினமலர் பெண்கள் மலரில் இவரு டைய பட்டாம்பூச்சிக் கவிதைகள் வெளிவந்துள்ளன.

இணைய இதழ்கள்.:- இளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு, வலைச்சரம், ஊடகம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய “ழ” ஆகிய இணையங்களில் எழுதி வருகின்றார் .
6. ”இணைய தள ப்ளாகர்” என்ற தலைப்பில் ”நம் உரத்த சிந்தனை” இதழில் இவரைப் பற்றி வெளியாகியுள்ளது
”தீக்கதிரி”ல் சாஸ்த்ரிபவனில் நடைபெற்ற விழாவில் பேசிய இவருடைய கருத்து வெளியாகி உள்ளது.
இவருடைய நூல்கள் ”சாதனை அரசி” பற்றியும், ”ங்கா” பற்றியும் ”திருச்சி தினமலர் ”பதிப்பிலும் ”இந்தியா டுடே”யிலும், ”லேடீஸ் ஸ்பெஷலிலு”ம் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இந்தப் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ”மக்கள் தொலைக்காட்சி”யில் இவருடைய சாதனை அரசிகள் புத்தகம் , நூல் விமர்சனம் பகுதியில் இடம் பெற்றது.
7. சிறப்புப் பேசாளர் மற்றும் சிறப்பு விருந்தினராக.
1. லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் சுய உதவிக் குழு மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் ( 2010) பற்றி பேசியது.

2. சென்னை சங்கமம் 100 கவிஞர்களுள் ஒருவராகப் பங்கேற்றது(2011)

3, சேரன் மிஷ்கினுடன் “யுத்தம் செய்” கலந்துரையாடல்,

ஸ்ரீ கான குஹா இசைப்பள்ளி ஆண்டுவிழாவில் தலைமையேற்றார்
சென்னை போர்ட் ட்ரஸ்ட்டில் துறைமுகப் பேரதிபர் அதுல்ய மிஸ்ராவுடன் சிறப்புப் பேச்சாளராக 2011 இல் பங்கேற்றார்

சிறப்பு “ நீயா நானா “வில் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றிய கருத்து.

அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் அரசுப் பள்ளியில் அம்பேத்தார் பிறந்த நாள் விழாவில் தலைமையேற்றார்


. சாஸ்த்ரி பவனில் மகளிர் தினத்தில் டாக்டர் கமலா செல்வராஜுடன் சிறப்புப் பேச்சாளராக 2011 இல் பங்கேற்றார்
.
. ஜவஹர் வித்யாலயாவில் நடனப் போட்டியில் நடுவராக.

. ஸ்ரீ ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயாவில் 110 ஆசிரியர்கள் முன் ஆசிரியர் தின உரை
..
பெண் சிசுக்கொலை விழிப்புணர்வு பற்றி பொதிகை காரசாரம் நிகழ்ச்சியில் பங்கேற்

.சூசைபுரம் தூய வளனார் பள்ளியில் மகளிர் தின உரை . 2012.

.சாஸ்த்ரி பவனில் மகளிர் தினத்தில் டாக்டர் சாந்தாமாவுடன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு மதர் தெரசா அவார்டு வழங்கி கௌரவிக்கப்பட்டா ர் . ( 2012)

மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சுதந்திரதின உரையாற்றினார் . ( 2012)

. புதுக்கோட்டை கற்பகவிநாயகர் ட்ரஸ்டின் ஜெ ஜெ கல்லூரிகளில் ( 4 ) மார்ச் 7 , 2013 அன்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் தின உரையாற்றினார்
. ஸ்கிரிப்ட் எழுத்தாளராக:-
சிகரம்.காம் என்ற வெப்சைட்டுக்காக எழுதப்பட்ட விளம்பர ஸ்க்ரிப்ட்.

9. பாடலாசிரியராக.
10. ஒருங்கிணைப்பாளராக.
1. லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக “ மெரீனாவில் ஒரு மாலை” என்ற நிகழ்ச்சி.
2. இவள் புதியவளுக்காக. ”வலைப்பூக்களில் கலக்கிவரும் புயல் பூக்கள் நிகழ்ச்சி”
3. பெண்கள் தினம் பற்றி எஸ் ஆர் எம் யூனிவர்சிசிட்டியின் எஃப் எம் ரேடியோவுக்காக 6 சிறப்புத் தகுதிப் பெண்களை ஒருங்கிணைத்துப் பேட்டி
11. விருதுகள்:-
1. “ WOMEN EMPOWER AWARDS “ AT SASTRI BHAVAN ON 2011 BY CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION, SASTRI BHAVAN. FOR PATHWAY TO DECENT WORK FOR WOMEN ( BY DFP- DIRECTORATE OF FIELD PUBLICITY).
2. “COMMUNITY SERVICE AWARD” BY ATCHAYA FOUNDATION. CHENNAI. ( FOR THE DISTINGUISHED HUMANITARIAN SERVICE TO THE COMMUNITY.)
3. சமூக இணையப் பங்களிப்புக்காக சிறந்த பெண் பதிவராக ஈரோடு சங்கமத்தில் வழங்கப்பட்டது.
12. தொலைக்காட்சிகள்:-
1. சென்னை சங்கமம் பற்றிய இவரது கருத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தி சானலில் காண்பிக்கப்பட்டது.

2. சேரன் மிஷ்கினுடன் யுத்தம் செய் கலந்துரையாடல் – கலைஞர் தொலைக்காட்சி.

3. ஸ்பெஷல் “நீயா, நானா..” – விஜய் டிவி
38f7637ab6d9fa1da209&page=1&viewtype=&category=

4. பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு தேவை – காரசாரம் – பொதிகைத் தொலைக்காட்சி.

5. பபாசி பற்றிய கருத்து – சன் நியூஸ். தொலைக்காட்சி.
6. எஸ் ஆர் எம் யுனிவர்சிட்டியின் முத்துச்சரம் வானொலி நிகழ்ச்சி சர்வதேச மகளிர் தினத்துக்காக.

7. இரு வானொலி நிகழ்ச்சிகளும் SOUND CLOUD இல் பதியப்பட்டுள்ளன.

8. Thenammmai Lakshmanan Speech, Thenammai Lakshmanan’s Independence Day Speech என்ற தலைப்புக்களில் YOU TUBE இல் நிகழ்ச்சிகள் பதியப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் சாதனையாகசெய்து உள்ள அன்பான சகோதரி
தேனம்மைலெக்ஷ்மணன்அவர்களை தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு(லங்கா தீபம் விருதும் கலைதீபம் பட்டமும் )வழங்கி கௌரவப் படுத்துவதற்கு தெரிவு செய்யப் பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது அமைப்பினர்கள் எல்லோரது வாழ்த்துக்களும் உங்களுக்கு சமர்ப்பணம்
நன்றி சகோதரி
பேட்டி :--கலைமகள்ஹிதாயா ரிஸ்வி  இலங்கை
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி ,கலை , லாசார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு