ஞாயிறு, 10 ஜூலை, 2011

தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அனுதாபம்

புகழ் மணம் வீசிய பேரறிஞர் தமிழ் பேராசான் அமரர் கா.சிவத்தம்பியின் மறைவு தமிழ் உலகுக்கு மிகப் பெரும் பாரிய இழப்பாகும்.பேராசிரியர் ஒரு தமிழ் களஞ்சியம் (பொக்கிசம்) ஆவார். என தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா றிஸ்வி தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.தமிழில் தொல்காப்பியம் முதல் நவீன இலக்கியங்களான நாவல்,கவிதை,சிறுகதை,விமர்சனம்,சினிமா,பத்திரிகையியல்,அரசியல்,சமூகவியல்,பொருளாதாரம் என பலதுறையும் விரவி நிற்கும்.பேராசிரியர் ஆங்கில அறிவின் மூலமாக தமிழை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் சுமார் 70 இற்கு மேற்பட்ட தமிழ் நூல்களை தமிழ் பேசும் உலகிற்கு தந்துள்ளார்.200 இற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.சங்க கால இலக்கியம் முதல் 20 ஆம் நூற்றாண்டு இலக்கியம் வரை அடங்கியுள்ளது.பேராசிரியர் அவர்களது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல,ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழ் மொழிக்கு ஈடு செய்ய முடியாத தொன்றாகும்.அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக