ஞாயிறு, 4 டிசம்பர், 2011

தாமரை(04)







பெயர் : குமாரி கே.எஸ்.செண்பகவள்ளி (மலேசியா)
                     (K.S.SENBAKAVALLY)
உலகச் செம் மொழிகளில் உயர் தனிச் சிறப்புடையது தமிழ் மொழி உலகில் வாழும் தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய், உணவாய் ,உணர்வாய் ,உழைப்பாய்,உழைப்பின் விளைவாயக்  கண்டுணர்ந்து வாழ்பவர்கள். 
உலக இலக்கிய
ங்களுக்குள்  தமிழ்  இலக்கியதிற்கு தனியொரு இடமுண்டு
 ஆம்  கடல் கடந்து  வாழும் (மலேசியாவை )பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும்  கொடவர் தான்  குமாரி கே .எஸ் . செண்பக வள்ளி (செண்பா ).
                       புதிய பார்வைகளோடு ,  புதிய  சிந்தனைகளோடு நாளைய தலை முறைகளையும் கருத்துக் கொண்டு இலக்கியங்கள்  படைக்க்  வேண்டுமென்று  விரும்புபவர்  சம  காலத்திலும் ,எதிர் காலத்திலும் இலக்கியத்துக்கு என்ன நாம் பங்களிப்பை செய்யப்  போகிறோம் என்று சிந்திப்பவர் .





சுமார்  (25)வருட  காலங்களுக்கு  மேலாக கலை இலக்கியப்  பயணத்தில் உலா வந்தது கொண்டிருக்கின்றார்
கல்வி ..,
கல்வி : Bachelor in Business Administration
BBA (Hons), USA  வரை  கற்றவர்

தொழில் :
.தற்போது  இவர்  மலேசியாவில்  மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம் (ATIONAL ARCHIVE OF MALAYSIA) அதிகாரியாக  (ARCHIVIST) கடமை  புரிந்து வருகின்றார்.

இலக்கியப் படைப்புகள்: சிறுகதைகள்,கவிதை (மரபு, புதுக்கவிதை, ஹைக் கூ) புதுக்கவிதை, ஹைக் கூ)   கட்டுரை  ,வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்)என எழுதி வருகிறார் .
கல்வி ,வறுமை ஒழிப்பு,  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு,   பெண்கள் விழிப் புணர்வு ,சமூக நீதிக் கொள்கை  போன்ற பல  சிந்தனைகளை  தனது  எழுத்துக்களோடு வெளிப்படுத்திக்  காட்டுபவர்.


தனது (13)வது வயதில் 1986 - ல் முதலாவது கவிதை தமிழ்நேசன்மலரில்  வெளியானது அதைத் தொடர்ந்தது
1990 - முதலாவது சிறுகதை - தமிழ்நேசன் 70ம் ஆண்டு மலர்
2004 - முதலாவது ஆய்வுக்கட்டுரை - வெளியாகின 
இதுவரை
கவிதை (மரபு, புதுக்கவிதை, ஹைக்கூ) : 65
இணைய இதழ் படைப்புகள் : 15
சிறுகதை, ஒரு பக்கக் கதைகள் : 46
ஆய்வுக்கட்டுரைகள் : 57 (மலாய் மொழியில் 6)
விமர்சனங்கள்  என்று  எழுதி வருகின்றார்
பெற்ற விருதுகள் ,

வாசகர் நற்பணி விருது (VNV - 2005)
சிறந்த சேவையாளர்   விருது     (2007)போன்றவற்றை

பரிசுகள் : சிறுகதை, கவிதை, கட்டுரை
நாளிதழ், வார, மாத இதழ்கள், பொது இயக்கங்கள் நடத்திய இலக்கியப் போட்டிகளில் பங்குக் கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளார் .
 அவைகள்,

தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம்,
கிள்ளான் வாசகர் இலக்கியச் சோலை,
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,
மக்கள் ஓசை,
தமிழ் நேசன்,
மன்னன் மாத இதழ்,
சூரியன் மாத இதழ்,
மலேசியப் பழஞ்சுவடிக் காப்பகம்,
பொது இயக்கங்கள் போன்றவைகள்



பொதுச்சேவை:
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் : துணைச் செயலாளர் ,
சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கம் : துணைச் செயலாளர் ,
சுங்கை சிப்புட் வாசகர் இயக்கம் : தலைவி,
இலங்கை  .தாடகம் கலை இலக்கிய வட்டம் :  ஆலோசகர் .


தற்சமயம் ஈடுபட்டிருக்கும் இலக்கியத் துறைகள்

நாளிதழ், வார, மாத இதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதி வருகின்றார் .

“தங்கமீன்”, “திண்ணை”, “மலேசிய எழுத்துலகம்” ஆகிய
இணையத்தளங்களில் படைப்புகளை எழுதி வருகின்றார்

நாட்டின் தேசத்தலைவர்கள், முக்கியமான நாட்களை குறித்து ஆய்வுக்
கட்டுரைகள் எழுதி வருகின்றார் .

மலேசிய மண்ணில் (கலை உலகில் )தமிழ் மொழி இலக்கியத்தின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கும் பெருமிதம் மிக்க சகோதரியின் தொடர்புகளுக்கு ,


பெயர் : குமாரி கே.எஸ்.செண்பகவள்ளி
(K.S.SENBAKAVALLY)

முகவரி : 516, தாமான் துன் சம்பந்தன்,
31100 சுங்கை சிப்புட் (வ),
பேராக் டாருல் ரிட்சுவான், மலேசியா
மின்னஞ்சல் -: ksvally@yahoo.com

பூமிக்கடியில்ஈரம் இருக்கின்ற இடமெல்லாம் தன் வேர் விரல்களை நீட்டும் அடி மரம் போல்
சென்பாவின் சிந்தனைகளும் நீண்டு செல்ல இதயம் பிழிந்த வாழ்த்துக்கள் தென்றலாய்  தடவிக்  கொள்ளட்டும் ..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக