வியாழன், 25 ஜூலை, 2013

கவி நுறு கலைகள் வளர்ப்போம்





மிக நீண்ட கால வரலாறு உடைய இலக்கிய அமைப்பு. தடாகம் கலை இலக்கிய வட்டம்

இதன் தலைமை இடம் சாய்ந்தமருது - கல்முனை

ஆண்டு தோறும் அகஸ்தியர் /லங்கா தீபம் / கலைதீபம் விருதுகள் வழங்கி வருகிறது.
தடாகம் கலை இலக்கிய வட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது.
நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கௌரவப்படுத்துவதும் கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் நூல் வெளியீடுகளை
 கவியரங்கங்களையும் நடத்துகிறது.

01/01/2013ல் இருந்து தடாகம் கலை இலக்கிய கல்வி 
கலை கலாச்சார  சர்வதேச அமைப்பாக மாறி உள்ளது 

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டு தோறும் பல கருத்தரங்கங்கள், பட்டறைகள் என நிகழ்ச்ச்சிகளை நடத்தி வரும் துடிப்பும் ஆர்வமுமிக்க ஒரு அமைப்பு

தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் நோக்கில் அண்
மைக் காலமாக சர்வதேச ரீதியில்
மாதா மாதம் கவிதைப் போட்டிகளை நடாத்தி வெற்றி பெற்றவர்களுக்கு கவியருவி /கவித்தீபம் பட்டங்களை வழங்கி வருகின்றது
நோயினால் சிரமப்பட்ட இரு உயிருக்கு எதிர் பாராத உதவிகளைச் செய்து உள்ளது (இன்று குணம் பெற்று சந்தோசமாக வாழ்கின்றார்கள்
பல ஆர்வலர்களின் சிறந்த பங்களிப்பினோடும் தடாகம் கலை இலக்கிய வட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

தற்போது சிறந்த எழுத்துப் படைப்புக்களை தேர்ந்தெடுத்து பரிசளிப்பது பற்றியும்முயற்சிகள் செய்துவருகின்றோம்
என்வே, தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார 
கலை சர்வதேச அமைப்பின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பல மாற்றங்களை செய்யவுள்ளோம்

01/உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தல்

02/வளரும் வளர்ந்து வரும் படைப்பாளர்களை உருவாக்குதல் (மாதத்துக்கு
ஒருமுறை படைப்பாற்றல் பற்றிய வழிகாட்டி முறைகளை பகிர்ந்து கொள்ளல் )

03/ நம் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை இனம் கண்டு அவற்றை பதிப்பித்து, தமிழ்துறை சார்ந்த உறவுகளுக்கு வழங்கச் செய்வதன் மூலம் உதவிகள் செய்தல்

04/வசதிகள் இல்லாத எழுத்தாளர்களின் எத்தனையோ அரிய படைப்புகள் நூல்வடிவம் பெறாமல் முடங்கிக் கிடக்கின்றன.அவற்றை நூலாக்க நமது தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினர்(வசதிகள் உள்ளோர் )துணை நிற்க வேண்டும்.

05/ அனைத்துக்கும் மேலாக நமக்குள் ஒற்றுமையையும் மொழி உணர்வையும் பேணிக்காத்தல்.வேண்டும் .

சர்வதேசமட்டத்தில் தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூகஅபிவிருத்திஅமைப்பு இமயமாகஉயர்ந்துநின்று தமிழ்மொழிக்கும் தமிழ்பேசும் இனத்துக்கும்துணையாக இருத்தல் வேண்டும்

இது எமது இலட்சியமாகும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக